தமிழ்நாடு செய்திகள்

கோடம்பாக்கம், அடையாறில் 8-ந்தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம்

Published On 2024-01-06 15:41 IST   |   Update On 2024-01-06 15:41:00 IST
  • குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
  • லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ள இணைய தளத்தை பயன்படுத்தி கொள்ளலா

சென்னை:

சென்னை தியாகராய நகர் வெங்கட் நாராயண சாலை மற்றும் சேமியர்ஸ் சாலையில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகிறது.

அதனால் 8-ந்தேதி காலை 6 மணி முதல் 9-ந் தேதி காலை 6 மணி வரை தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

எனவே பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரக் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ள இணைய தளத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும் குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் எவ்வித தடையின்றி வழக்கம் போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும் என்று குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News