தமிழ்நாடு செய்திகள்

19 மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கு- நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published On 2023-02-06 20:16 IST   |   Update On 2023-02-06 20:16:00 IST
  • மேற்படிப்பு மாணவர்களுக்காக மாநில அரசு அதிக செலவு செய்கிறது.
  • அதன் பிரதிபலனாக மருத்துவர்கள் இந்த சமுதாயத்திற்கு சேவையாற்ற வேண்டும்.

தாங்கள் பெற்ற நிபுணத்துவத்திற்கு ஏற்ப மருத்துவமனைகளில் நியமிக்க கோரி 19 மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்ந்த 19 மருத்துவர்களும் பிப்ரவரி 10ம் தேதிக்குள் பணியில் சேர சென்னை உயர் நீதிமன்றம்அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், மேற்படிப்பு மாணவர்களுக்காக மாநில அரசு அதிக செலவு செய்கிறது, அதற்கு பிரதிபலனாக மருத்துவர்கள் இந்த சமுதாயத்திற்கு சேவையாற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News