தமிழ்நாடு

நெல்லை அறிவியல் மையத்தில் வெடிகுண்டு சோதனை

Published On 2024-01-06 09:08 GMT   |   Update On 2024-01-06 09:08 GMT
  • மர்மநபர் அனுப்பிய மின்னஞ்சல் அடிப்படையில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
  • மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டில் நெல்லையில் மட்டுமே அறிவியல் மையம் அமைந்துள்ளது.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் உள்ள அறிவியல் மையத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவில் உள்ள 26 அறிவியல் மையங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்மநபர் அனுப்பிய மின்னஞ்சல் அடிப்படையில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டில் நெல்லையில் மட்டுமே அறிவியல் மையம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News