தமிழ்நாடு
சென்னை பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
- கடந்த வாரம் இதே பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்ததையடுத்து தீவிர சோதனை நடைபெற்றது.
- கோவையில் உள்ள தனியார் பள்ளிக்கு இன்று காலையில் மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
சென்னை:
மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த வாரம் இதே பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்ததையடுத்து தீவிர சோதனை நடைபெற்றது. இன்று இரண்டாவது முறையாக அதே பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
ஏற்கனவே கோவையில் உள்ள தனியார் பள்ளிக்கு இன்று காலையில் மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், சென்னையிலும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.