தமிழ்நாடு செய்திகள்
தருமபுரி- ஈரோடு மாவட்டங்களுக்கு காங்கிரஸ் பொறுப்பாளர்கள் நியமனம்
- தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
- தருமபுரி மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தருமபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவி.சிற்றரசுவின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு, அவருக்கு பதிலாக மக்களவை முன்னாள் உறுப்பினர் பி.தீர்த்தராமன் தருமபுரி மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி. ரவிக்கு பதிலாக திருச்செல்வம் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.