தமிழ்நாடு செய்திகள்

கோப்பு படம்

பழனியில் தனியார் வளர்க்கும் யானைக்கு உடல்நலம் பாதிப்பு- விலங்குகள் நலவாரிய அலுவலர்கள் ஆய்வு

Published On 2023-03-10 10:41 IST   |   Update On 2023-03-10 10:41:00 IST
  • யானைக்கு காலில் காயம் ஏற்பட்டு உடல்நலம் குன்றியது.
  • யானைக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பது குறித்தும், சிகிச்சை அளிக்கும் மருத்துவர் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தனர்.

பழனி:

திண்டுக்கல் மாவட்டம் பழனி தேரடியை சேர்ந்தவர் மகுடீஸ்வரன். இவர் 60 வயதான சரஸ்வதி என்ற பெண் யானையை வளர்த்து வருகிறார். இந்த யானைக்கு காலில் காயம் ஏற்பட்டு உடல்நலம் குன்றியது. இதற்கு மகுடீஸ்வரன் உரிய சிகிச்சை அளிக்காமல் இருந்ததாக அப்பகுதி பொதுமக்கள் விலங்குகள் நலவாரியத்திற்கு புகார்கள் அளித்தனர்.

இதனையடுத்து மதுரையில் இருந்து வந்த தேசிய விலங்குகள் நலவாரிய அலுவலர் முருகேஸ்வரி, விலங்குகள் வதைதடுப்பு கண்காணிப்பாளர் அண்ணாவிநாதன் கொண்ட குழுவினர் யானைக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பது குறித்தும், சிகிச்சை அளிக்கும் மருத்துவர் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தனர்.

மேலும் யானையை முறையாக பராமரிக்க வேண்டும். சத்தான உணவு வழங்க வேண்டும். யானையை வீதியில் நடக்க வைத்தும், ஆசி வழங்க வைத்தும் பணம் வசூலிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட அறிவுரைகளை மகுடீஸ்வரனுக்கு அவர்கள் வழங்கினர். இந்த விசாரணை அறிக்கையை டெல்லியில் உள்ள தேசிய விலங்குகள் நலவாரியத்திற்கு அளிக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News