தமிழ்நாடு

சட்ட விதிகளில் அதிரடி திருப்பம்: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும்

Published On 2022-07-11 06:50 GMT   |   Update On 2022-07-11 06:50 GMT
  • கழக பொதுச்செயலாளர் பொறுப்பிற்குப் போட்டியிட கழகத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகள் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
  • தலைமைக் கழகப் பொறுப்புகளில் குறைந்தது தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் விஷயத்தில் கட்சியின் சட்ட விதிகளில் அதிரடியாக திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

கழக சட்ட திட்ட விதி எண் 20அ பிரிவு-1 கீழ்க்கண்டவாறு மாற்றி அமைக்கப்படுகிறது.

* கழக உறுப்பினர்கள், கழகப் பொதுச்செயலாளர் பொறுப்பிற்குப் போட்டியிட தகுதி உடையவர் ஆவார்கள்.

* கழக பொதுச்செயலாளர் பொறுப்பிற்குப் போட்டியிட கழகத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகள் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.

* தலைமைக் கழகப் பொறுப்புகளில் குறைந்தது தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.

* குறைந்தது 10 மாவட்டக் கழகச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 மாவட்டக் கழகச் செயலாளர்கள் வழிமொழிய வேண்டும். மாவட்டக் கழகச் செயலாளர், ஒரு வேட்பாளருக்கு மட்டும் தான் முன்மொழியவோ அல்லது வழிமொழியவோ வேண்டும்.

* கழகத்தின் சட்ட திட்ட விதிமுறைகளில், விதி-20அ பிரிவு-2 "கழகப் பொதுச்செயலாளர், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்'' என்று மாற்றி அமைக்கப்படுகிறது.

* கழகத்தின் சட்ட திட்ட விதிமுறைகளில், விதி-20ஆ பின்வருமாறு மாற்றி அமைக்கப்படுகிறது.

* கழக துணை பொதுச்செயலாளர்களை, கழக செயலாளர் நியமனம் செய்வார்.

"கழக சட்ட திட்ட விதிகளின் அடிப்படை உணர்வாக உருவாக்கப்பட்டுள்ள "கழகப் பொதுச் செயலாளர்" கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மட்டும் நீக்குவதற்கோ, மாற்றுவதற்கோ, திருத்துவதற்கோ உரியதல்ல.

* கழகத்தின் சட்ட திட்ட விதிமுறைகளில், விதி எண். 45-ல், பின்வருவன சேர்க்கப்படுகிறது: "கழக சட்ட திட்ட விதிகளின் அடிப்படை உணர்வாக உருவாக்கப்பட்டுள்ள "கழகப் பொதுச்செயலாளர்" கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மட்டும் நீக்குவதற்கோ, மாற்றுவதற்கோ, தளர்த்துவதற்கோ அதிகாரம் இல்லை.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News