தமிழ்நாடு
முதலமைச்சரின் சிறப்பு விருது பெற்றார் ஆயி பூரணம் அம்மாள்
- முப்படை சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
- பதக்கங்கள் பெற்றவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
சென்னை :
சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே 75-வது குடியரசு தின விழா நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் ஆர்.என். ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து முப்படை சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை கவர்னர் ஆர்.என். ரவி ஏற்றுக் கொண்டார்.
இதனை தொடர்ந்து, வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு பதக்கங்களையும், விருதுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அரசு பள்ளி கட்டுவதற்காக ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசுக்கு நன்கொடையாக கொடுத்த ஆயி பூரணம் அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பின்னர், பதக்கங்கள் பெற்றவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.