தமிழ்நாடு

6 பெரிய மரங்கள் உள்பட 30 மரங்கள் சாய்ந்தன- மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்

Published On 2023-06-20 09:04 GMT   |   Update On 2023-06-20 09:04 GMT
  • மரம் விழுந்தது பற்றிய தகவல் அறிந்ததும் உடனடியாக ஊழியர்கள் விரைந்து மரங்களை வெட்டி அகற்றினார்கள்.
  • ஆபத்தான நிலையில் இருக்கும் மரக்கிளைகளையும் வெட்டி வருகிறார்கள்.

மழையால் சென்னையில் ஈக்காட்டு தாங்கல், கொளத்தூர், அடையாறு பகுதிகளில் 6 பெரிய மரங்கள் உள்பட 30 மரங்கள் விழுந்தன. மரங்களை வெட்டி அகற்ற 6 மின் வாகனங்கள் மற்றும் 200 சிறிய மர அறுவை எந்திரங்களை மாநகராட்சி தயார் நிலையில் வைத்துள்ளது.

மரம் விழுந்தது பற்றிய தகவல் அறிந்ததும் உடனடியாக ஊழியர்கள் விரைந்து மரங்களை வெட்டி அகற்றினார்கள். ஆபத்தான நிலையில் இருக்கும் மரக்கிளைகளையும் வெட்டி வருகிறார்கள். பாரம் தாங்காமல் சாய்வதை தடுக்க இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News