தமிழ்நாடு

தமிழக அமைச்சரவை

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 9ம் தேதி தொடங்குகிறது - சபாநாயகர் அப்பாவு

Published On 2022-12-26 13:23 GMT   |   Update On 2022-12-26 13:51 GMT
  • சட்டசபை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும்.
  • தற்போதைய சூழ்நிலையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

சென்னை:

ஒவ்வொரு ஆண்டும் முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம்.

இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஜனவரி 9-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரின் முதல் நாளில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துகிறார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு அடுத்த இருக்கை ஒதுக்கப்படும்.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய சூழ்நிலையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

சட்டசபை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

Tags:    

Similar News