தமிழ்நாடு

பைன்பாரஸ்ட் பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

கோடை விடுமுறை இன்றுடன் நிறைவு- கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

Published On 2023-06-11 09:43 GMT   |   Update On 2023-06-11 09:44 GMT
  • பள்ளிகள் திறப்பும் தள்ளி வைக்கப்பட்டதால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.
  • கோடை விழா மலர் கண்காட்சி முடிந்த பின்னரும் நகர் பகுதியில் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் மலை ஸ்தலங்களுக்கு பொதுமக்கள் படையெடுக்க தொடங்கினர்.

மேலும் பள்ளிகள் திறப்பும் தள்ளி வைக்கப்பட்டதால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இதனால் கோடை விழா மலர் கண்காட்சி முடிந்த பின்னரும் நகர் பகுதியில் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.

இன்றுடன் கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர்.

இதனால் முக்கிய சுற்றுலா இடங்களான பைன் பாரஸ்ட், தூண்பாறை, குணா குகை, பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் இதமான சீதோஷ்ணம் நிலவியதால் நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தனர். கொரோனா ஊரடங்கால் சிறு குறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த ஆண்டு கோடை விழாவின்போது ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்ததால் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் உள்பட சுற்றுலா தொழிலை நம்பியுள்ளவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

Similar News