தமிழ்நாடு

நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 19 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்

Published On 2023-09-13 18:16 GMT   |   Update On 2023-09-13 18:16 GMT
  • தமிழ்நாட்டை சேர்ந்த சுமார் 19 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
  • மீனவர்கள் கைது விவகாரத்தில் மத்திய அரசு தீர்வு காணவேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது.

ராமேஸ்வரம்:

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மீனவர்கள் கைது நடவடிக்கை விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை நெடுந்தீவு அருகே தென்கிழக்கு கடல் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News