தமிழ்நாடு செய்திகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம் வருகிற 25-ந்தேதி நடைபெற உள்ளது.
- வாக்காளர்கள் தாமாகவே முன்வந்து படிவம் 6பி-யை பூர்த்தி செய்து முகாம் அலுவலர்களிடம் நேரில் சமர்ப்பிக்கலாம்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கான சிறப்பு முகாம் வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.
வாக்காளர்கள் தாமாகவே முன்வந்து படிவம் 6பி-யை பூர்த்தி செய்து முகாம் அலுவலர்களிடம் நேரில் சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.