தமிழ்நாடு
காஞ்சிபுரத்தில் குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
- பொய்யாகுளம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
- சந்தோஷ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த பொய்யாகுளம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார்(26). இவர் மீது பல்வேறு குற்றவழக்குகள் உள்ளன. தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த சந்தோஷ்குமாரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், மாவட்ட கலெக்டர் ஆர்த்திக்கு பரிந்துரை செய்தார்.
இதைத்தொடர்ந்து சந்தோஷ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்.