தமிழ்நாடு

பிரேமலதா

தே.மு.தி.க. வெற்றிக்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும்- பிரேமலதா

Published On 2022-08-24 08:04 GMT   |   Update On 2022-08-24 10:31 GMT
  • தே.மு.தி.க. பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
  • தே.மு.தி.க.வின் வெற்றிக்காக தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும்.

சென்னை:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 70-வது பிறந்தநாள் விழாவை இன்று தே.மு.தி.க.வினர் கொண்டாடி வருகின்றனர்.

கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் விஜயகாந்த் பிறந்தநாள் விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஆண்டுதோறும் வறுமை ஒழிப்பு தினமாக அவரது பிறந்தநாளை கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் இன்று பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

தே.மு.தி.க. பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கட்சி அலுவலகத்தில் மருத்துவ முகாமும் நடைபெற்றது.

இந்த முகாமில் பங்கேற்று பலர் பரிசோதனைகளை மேற்கொண்டனர். இவர்களுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

எந்த நோக்கத்துக்காக தே.மு.தி.க. தொடங்கப்பட்டதோ அதனை அடைந்தே தீருவோம். தே.மு.தி.க.வின் வெற்றிக்காக தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும். நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம். கேப்டன் நலமுடன் உள்ளார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

கேப்டனுக்கு ஏற்பட்டிருப்பது உடல் சோர்வுதான். 75-வது சுதந்திர தின நாள் அன்று தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று கேப்டனே விரும்பினார்.

70-வது பிறந்த நாளான நாளை கேப்டனை நீங்களே சந்திக்கலாம். கேப்டன் பிறந்தநாளையொட்டி 70 வகையான நலத்திட்ட உதவிகளை தே.மு.தி.க.வினர் வழங்கி வருகிறார்கள். எதிர்காலத்தில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு பிரேமலதா பேசினார்.

இந்த விழாவில் தே.மு.தி.க. துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, மாவட்ட செயலாளர்கள் வக்கீல் வி.சி.ஆனந்தன், செந்தில், கிருஷ்ணமூர்த்தி, ஆர்.எஸ். பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏராளமான தொண்டர்களும் திரண்டிருந்தனர்.

Tags:    

Similar News