தமிழ்நாடு

நடைபாதையில் கடை வைக்கும் தகராறில் பெண்ணுக்கு கத்திக்குத்து- சமூக வலைதளத்தில் பிரபலமான பெண் கைது

Published On 2023-08-16 10:39 GMT   |   Update On 2023-08-16 10:39 GMT
  • நதியாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அஸ்வினி அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
  • அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிய நதியாவை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் பூஞ்சேரி நரிக்குறவர் பகுதியை சேர்ந்தவர் அஸ்வினி. இவர் மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் அன்னதானம் மறுக்கப்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் பிரபலமானவர்.

நேற்று மாலை கடற்கரை கோவில் நடைபாதையில் கடை வைப்பதில் இவருக்கும் திருக்கழுக்குன்றம் கொத்தி மங்கலம் பகுதியை சேர்ந்த நரிக்குறவர் பெண் நதியா (33) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த அஸ்வினி தனது கையில் வைத்து இருந்த கத்தியால் நதியாவின் தோள்பட்டை, வயிறு, கை உள்ளிட்ட பகுதியில் குத்தி கிழித்தார். இதில் நதியாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அஸ்வினி அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிய நதியாவை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பூஞ்சேரி பகுதியில் இருந்த அஸ்வினியை மாமல்லபுரம் போலீசார் கைது செய்தனர்.

அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கைதான அஸ்வினி மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News