தமிழ்நாடு

ஈ.பி.எஸ் மீதான வழக்கு- விசாரணை நடத்த காவல் துறைக்கு தடை

Published On 2023-07-12 11:59 GMT   |   Update On 2023-07-12 14:51 GMT
  • காவல் அதிகாரிகள் மீது அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.
  • சேலம் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இறுதி முடிவெடுக்கும் வரை விசாரணையை பெரிதுபடுத்த வேண்டாம்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான தேர்தல் குற்றச்சாட்டுகள் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறி விசாரணை நடத்தியதால் காவல் அதிகாரிகள் மீது அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

இதுதொடர்பான வழக்கு மீதான விசாரணை நடத்த காவல்துறைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இறுதி முடிவெடுக்கும் வரை விசாரணையை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் சேலம் மாநகர குற்றப்பிரிவுக்கு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

Similar News