தமிழ்நாடு

டி.டி.வி.தினகரன் தலைமையில் அ.ம.மு.க. பொதுக்குழு கூட்டம்- வானகரத்தில் 6-ந் தேதி நடைபெறுகிறது

Published On 2023-07-30 10:10 GMT   |   Update On 2023-07-30 10:10 GMT
  • வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடா சலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளது.
  • அனைத்து கழக பொதுக் குழு உறுப்பினர்களும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

சென்னை:

பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலுக்காக ஒவ்வொரு கட்சியும் இப்போதே தங்களை தயார்படுத்தி வருகிறது. எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைப்பது எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்று இப்போதே முடிவு செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

அந்த வைகயில் டி.டி.வி.தினகரன் தலைமை யிலான அ.ம.மு.க. தற்போது ஓ.பன்னீர்செல்வத்துடன் பாராளுமன்ற தேர்தலில் இவர்களுக்குள் கூட்டணி உடன்பாடு ஏற்படும் என தெரிகிறது.

தேவர் சமுதாய வாக்குகளை முழுமையாக பெறுவதற்கு இவர்களது வியூகம் அமையும் என தெரிகிறது.

இந்த நிலையில் அ.ம.மு.க. பொதுக் குழுக்கூட்டம் வருகிற ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி கூடுகிறது.

இது தொடர்பாக அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

அ.ம.மு.க. பொதுக்குழு கூட்டம், கழக துணைத்தலைவர் எஸ்.அன்பழகன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) தலைமையில் வருகிற 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 8.30 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடா சலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

அனைத்து கழக பொதுக் குழு உறுப்பினர்களும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News