தமிழ்நாடு

ஈரோட்டில் இருந்து சொந்த ஊர் புறப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ரெயில் நிலையத்தில் குவிந்தனர்

Published On 2024-04-10 04:27 GMT   |   Update On 2024-04-10 04:27 GMT
  • மூட்டை முடிச்சுகளுடன் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்த அவர்கள் ரெயில்களில் ஏறி சென்றனர்.
  • தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு ஆலைகளில் தயாரிப்பு பணி பாதிக்கும் என்றும் உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

ஈரோடு:

ஈரோடு மாநகர் பகுதி, புறநகர் பகுதி, பெருந்துறை சிப்காட் உள்ளிட்ட கிராம பகுதிகளில் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் பணியாற்று வருகின்றனர்.

இது தவிர செங்கல் சூளை, கெமிக்கல் தொழிற்சாலை, தனிப்பட்டறை என ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பிட்ட கால இடைவேளையில் அவர்கள் சொந்த ஊர் சென்று திரும்புவது வழக்கம். அவ்வாறு சொந்த ஊருக்கு செல்லும்போது குறைந்தது 10 முதல் 15 நாட்களுக்கு விடுமுறை எடுத்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக வருகிற 19-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் ஓட்டு போடவும், பிரசாரத்தில் ஈடுபடவும் வட மாநில தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நேற்று இரவு ஈரோடு ரெயில் நிலையத்தில் குவிந்தனர். மூட்டை முடிச்சுகளுடன் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்த அவர்கள் ரெயில்களில் ஏறி சென்றனர்.

இன்று காலையில் ஈரோடு ரெயில் நிலையத்தில் வட மாநில தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் சொந்த ஊர் செல்ல வந்திருந்தனர். இனி வரும் நாட்களில் சொந்த ஊர் செல்லும் வட மாநில தொழிலாளர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது. இதனால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு ஆலைகளில் தயாரிப்பு பணி பாதிக்கும் என்றும் உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News