தமிழ்நாடு

134 அடியாக குறைந்த முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்

Published On 2024-02-04 07:12 GMT   |   Update On 2024-02-04 07:12 GMT
  • வைகை அணையின் நீர்மட்டம் 69.16 அடியாக உள்ளது.
  • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.75 அடியாக உள்ளது.

கூடலூர்:

தொடர் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இதனால் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி 134.20 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 296 கன அடி நீர் மட்டுமே வருகிறது. இருந்தபோதும் தமிழக பகுதிக்கு 1500 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து 1321 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1769 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 69.16 அடியாக உள்ளது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.75 அடியாக உள்ளது. வருகிற 75 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. 29.29 கன அடி நீர் வருகிறது. 25 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

Tags:    

Similar News