ஐடி துறையின் வளர்ச்சியும் முன்னேற்றமும்தான் திராவிட மாடல் ஆட்சியின் தனித்தன்மை
- முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில்தான் ஐடி துறை மிகவும் உயர்ந்தது.
- ஐடி துறையில் மாற்றங்களை ஏற்படுத்த பழனிவேல் தியாகராஜனை அமைச்சராக நியமித்தேன்.
சென்னை:
சென்னை நந்தம்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:
* 1996ல் கணினி வாசலை திறந்து வைத்தவர் கலைஞர் கருணாநிதி.
* முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தான் ஐடி துறை மிகவும் உயர்ந்தது.
* கால் நூற்றாண்டுக்கு முன்பே இதை செய்ததுதான் கலைஞர் கருணாநிதியின் சாதனை.
* முதல் 2 ஆண்டுகளில் நிதி அமைச்சராக மிக சிறப்பாக செயல்பட்டவர் பழனிவேல் தியாகராஜன்.
* நிதித்துறையில் சிறப்பாக செயல்பட்டு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியவர் பழனிவேல் தியாகராஜன்.
* நிதித்துறையை போலவே ஐடி துறைக்கும் மாற்றங்கள் தேவைப்பட்டது.
* ஐடி துறையில் மாற்றங்களை ஏற்படுத்த பழனிவேல் தியாகராஜனை அமைச்சராக நியமித்தேன்.
* 750 திட்டங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.
* ஐடி துறையின் வளர்ச்சியும் முன்னேற்றமும் தான் திராவிட மாடல் ஆட்சியின் தனித்தன்மை என்று கூறினார்.