தமிழ்நாடு

காவலர் துப்பாக்கிச்சுடும் போட்டியில் வெற்றி பெற்ற காவலர்களுக்கு பரிசுகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2023-01-13 13:43 GMT   |   Update On 2023-01-13 13:43 GMT
  • பரிசு வழங்கும் விழா எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது.
  • வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசு மற்றும் பதக்கங்கள் வழக்கினார்.

சென்னை:

காவலர் துப்பாக்கிச்சுடும் போட்டியில் வெற்றி பெற்ற காவலர்களுக்கு பரிசு வழங்கும் விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது.  போட்டியில் வெற்றி பெற்ற காவலர்களுக்கு பரிசு மற்றும் பதக்கங்களை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

23-வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி, தமிழ்நாடு காவல்துறை நடத்தியது. செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அதிரடிப் படை துப்பாக்கிச் சுடும் பயிற்சி மைதானத்தில் 09.01.2023 முதல் 13.01.2023 வரை நடைபெற்றது. 

Tags:    

Similar News