தமிழ்நாடு

ஐகோர்ட் தீர்ப்பை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கர்

Published On 2024-01-10 08:35 GMT   |   Update On 2024-01-10 09:06 GMT
  • பொதுமக்களின் வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் நேற்று 95 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன.
  • தொழிற்சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதில் எந்த இடையூறும் இல்லை.

சென்னை:

தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 2-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பொதுமக்களின் வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் நேற்று 95 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. வேலைநிறுத்தம் இன்று 2-வது நாளாக நீடித்து வரும் நிலையில் முழு அளவில் பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

இந்நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:

* தொழிற்சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதில் எந்த இடையூறும் இல்லை.

* தொழிற்சங்கத்தினர் தொடர்ந்து பிடிவாதத்தில் இருக்கிறார்கள்.

* போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தடை கோரிய வழக்கில் இன்று பிற்பகலுக்கு பிறகு கிடைக்கும் தீர்ப்பை பொறுத்து மேல் நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

Tags:    

Similar News