தமிழ்நாடு

சேரி மொழி என்ற கருத்திற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன்: குஷ்பு அதிரடி

Published On 2023-11-25 07:28 GMT   |   Update On 2023-11-25 07:28 GMT
  • சேரி என்பதை நான் எந்த அர்த்தத்திலும் சொல்லவில்லை.
  • நான் இதுவரை தரம்குறைந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியதில்லை.

சென்னை:

சென்னை விமான நிலையத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மணிப்பூர் சம்பவத்திற்காக முதலில் குரல் கொடுத்தது நான்தான். இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என எப்படி சொல்வீர்கள்?

என்னுடைய டுவீட்டில் தெளிவாகவே நான் கூறியுள்ளேன். சேரி என்பதை நான் எந்த அர்த்தத்திலும் சொல்லவில்லை. இதுவரை நான் தரம் குறைந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியதில்லை.

புரிந்து கொள்ளாதவர்களை பற்றி நான் என்ன செய்ய முடியும்? வேளச்சேரி, செம்மஞ்சேரி பெயர்களில் உள்ள அர்த்தம் என்ன?

அரசாங்க கோப்புகளிலேயே சேரி என்ற வார்த்தை இருக்கிறது

திரவுபதி முர்மு குடியரசு தலைவராக பொறுப்பேற்ற போது காங்கிரஸ் கட்சியினர் சொன்னது என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

Similar News