தமிழ்நாடு
அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு வரலாம்: கிருஷ்ணசாமி
- அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி விவகாரத்தில் காத்திருந்தால் நல்ல முடிவு கூட வரலாம் என்பது என்னுடையது நிலைபாடு.
- தி.மு.க.வை 40 தொகுதியிலும் வீழ்த்தி , மாவட்ட செயலாளர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பது எனது எண்ணம்.
சென்னை:
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி விவகாரத்தில் காத்திருந்தால் நல்ல முடிவு கூட வரலாம் என்பது என்னுடையது நிலைபாடு. கூட்டணி கட்சிகள் ஒன்று சேர்ந்து தி.மு.க.வை வீழ்த்த வேண்டும்.
எனக்கு கிடைத்த தகவல்படி பா.ஜ.க. மேலிடம் 5 மாநில தேர்தலுக்கு பிறகு கூட மீண்டும் அ.தி.மு.க.வை கூட்டணியில் சேர்க்கலாம். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிலையற்ற தன்மை நிகழ்கிறது.
தி.மு.க.வை 40 தொகுதியிலும் வீழ்த்தி, மாவட்ட செயலாளர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பது எனது எண்ணம்.
இவ்வாறு அவர் கூறினார்.