தமிழ்நாடு செய்திகள்

கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் திட்டம்- தமிழக அரசு ஒப்புதல் தரவில்லை- ஆர்டிஐ தகவல்

Published On 2024-07-27 20:29 IST   |   Update On 2024-07-27 20:29:00 IST
  • சித்தலம்பாக்கத்தை சேர்ந்த தயானந்த் கிருஷ்ணன் எழுப்பிய கேள்விக்கு பதில்.
  • மத்திய அரசிடம் ஒப்புதல் கோரப்படும் என தமிழக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் கூறியிருந்தார்.

சென்னை விமான நிலையம்- கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் திட்டம் 22 மாதங்களாக முடங்கி உள்ளது.

இதுதொடர்பாக, சித்தலம்பாக்கத்தை சேர்ந்த தயானந்த் கிருஷ்ணன் எழுப்பிய கேள்விக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் அளிக்கப்பட்டது.

அதில், தமிழக அரசின் நிதித்துறை இன்னும் ஒப்புதல் தரவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விமான நிலையம்- கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரெயில் வழித்தடத்தை நீட்டிக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.4,625 கோடியில் செயல்படுத்த மத்திய அரசிடம் ஒப்புதல் கோரப்படும் என தமிழக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் கூறியிருந்தார்.

2022ம் ஆண்டு செப்டம்பரில் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம், விமான நிலையம்- கிளாம்பாக்கம் வரை திட்ட அறிக்கை தயாரித்து தமிழக அரசிடம் தந்தது.

தமிழக அரசின் உயர் அதிகார குழு, முக்கிய துறைகள் ஒப்புதல் அளித்தும், நிதித்துறையிடம் இருந்து இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News