தமிழ்நாடு

தமிழகத்தின் முன்னேற்றத்தில் தி.மு.க. அரசு அக்கறை காட்ட வேண்டும்: ஜார்கண்ட் கவர்னர்

Published On 2023-10-26 08:05 GMT   |   Update On 2023-10-26 09:34 GMT
  • வேண்டாத ஒரு விவாதத்தை எடுத்துக்கொண்டு அதில் அரசியல் லாபம் காண்பது தான் தி.மு.க.வின் அணுகுமுறையாக உள்ளது.
  • தமிழகத்தில் மூலை முடுக்கெல்லாம் கஞ்சா விற்பனை நடக்கிறது.

கோவை:

ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தப்படுவதும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அரவணைப்பது போல தமிழக அரசு செயல்படுவதும் கண்டனத்துக்குரியது.

குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை தண்டனையில் இருந்து தப்ப வைப்பதும், மன்னிப்புத்தருவதும் அதற்கு அண்ணாவின் பெயரை உபயோகப்படுத்துவதும் சரியான அணுகுமுறை அல்ல.

மக்களுக்கு நன்மை செய்வதை காட்டிலும் வேண்டாத ஒரு விவாதத்தை எடுத்துக்கொண்டு அதில் அரசியல் லாபம் காண்பது தான் தி.மு.க.வின் அணுகுமுறையாக உள்ளது. தேவையற்றதை ஒதுக்கிவிட்டு தமிழகத்தின் முன்னேற்றத்தில் தி.மு.க. அரசும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழகத்தில் மூலை முடுக்கெல்லாம் கஞ்சா விற்பனை நடக்கிறது. இதில் காவல்துறையினர் கவனத்தை செலுத்தி கஞ்சாவை தமிழகத்தில் இருந்து முற்றிலும் அகற்ற வேண்டும். போதையில் இருந்து இளைஞர்களை விடுவிக்கும்போது தான் தமிழகம் முன்னேற்றத்தை நோக்கி விரைவாக பயணிக்கும். பிரதமர் நரேந்திரமோடியை தமிழர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். சாதிவாரியான கணக்கெடுப்பு தேவையா, இல்லையா? என்பதை காலமும், சமூகமும் தான் முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News