தமிழ்நாடு

மதுரையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.4 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல்

Published On 2024-04-13 02:51 GMT   |   Update On 2024-04-13 02:51 GMT
  • வண்டியூர் சுங்கச்சாவடி அருகே பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
  • உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

மதுரையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை சுங்கச்சாவடி அருகே சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

வண்டியூர் சுங்கச்சாவடி அருகே பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, வாகனத்தில் எடுத்து வரப்பட்ட ரூ.4 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மதுரை உத்தங்குடி பகுதியில் ஏடிஎம்-ல் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.1.53 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News