தமிழ்நாடு

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி அமையும்- ஜெயக்குமார் பேட்டி

Published On 2022-12-22 07:28 GMT   |   Update On 2022-12-22 07:28 GMT
  • எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. இயங்கி வருகிறது.
  • அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு கட்சிக்கொடியை பயன்படுத்துவது தவறு.

சென்னை:

சென்னை பெசன்ட் நகரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. இயங்கி வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் அவரது தலைமையிலான கூட்டணிதான் அமையும். அவரது தலைமையை ஏற்றுத்தான் எல்லோரும் வருவார்கள்.

1989, 1991-ம் ஆண்டுகளில் ஓ.பி.எஸ். யார் என்று தெரியாது. 1996-லும் கூட அவர் யார் என்று தெரியாது. 2001-ம் ஆண்டுதான் கட்சியில் அவர் யார் என்று தெரிய வந்தது. அதற்கு முன்பு தேனி நகரத்தில் மட்டும்தான் அவரை தெரியும். நான் 1991-ம் ஆண்டே அமைச்சராகி விட்டேன்.

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு கட்சிக்கொடியை பயன்படுத்துவது தவறு.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News