தமிழ்நாடு செய்திகள்

வெற்றி துரைசாமியை தேடும் பணியில் இந்திய கடற்படை

Published On 2024-02-06 14:44 IST   |   Update On 2024-02-06 14:44:00 IST
  • சட்லஜ் நதியில் கார் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உயிரிழந்தார்.
  • விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 15 கி.மீ. சுற்றளவில் வெற்றி துரைசாமியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னை:

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி (45) தொழில் அதிபரான இவர் தந்தையுடன் சேர்ந்து மனித நேய பயிற்சி மையத்தை கவனித்து வருகிறார்.

இவர் இமாச்சலபிரதேசத்தில் உள்ள லடாக் பகுதிக்கு சுற்றுலா சென்று இருந்தார். அங்கிருந்து திரும்பும்போது சட்லஜ் நதியில் கார் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உயிரிழந்தார். வெற்றி துரைசாமியுடன் சென்ற உதவியாளர் கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டார்.

காரில் பயணம் செய்த வெற்றி மாயமானார். அவரை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மாயமான வெற்றி துரைசாமியை கண்டுபிடிக்க இந்திய கடற்படையின் உதவியை கின்னூர் மாவட்ட நிர்வாகம் நாடி உள்ளது.

இதைத்தொடர்ந்து சென்னை அடையார் கடற்படை தளத்திலிருந்து, சிறப்பு பயிற்சி பெற்ற கடற்படை வீரர்கள் இமாச்சல் விரைந்துள்ளனர்.

விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 15 கி.மீ. சுற்றளவில் வெற்றி துரைசாமியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மாயமான வெற்றி துரைசாமி குறித்து தகவல் அளித்தால் ரூ.1 கோடி சன்மானம் அளிக்கப்படும் என்று வெற்றி துரைசாமியின் தந்தை சைதை துரைசாமி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News