தமிழ்நாடு

ஒரு குடும்பத்திற்கு 10 லட்சம் வீதம் மருத்துவ காப்பீடு வசதி செய்து தருவேன் - பாரிவேந்தர்

Published On 2024-04-04 08:18 GMT   |   Update On 2024-04-04 08:23 GMT
  • வடக்கு ஈச்சாம்பட்டி, சிறுகானூர், நடு இருங்கலூர், கீழ வானகரம் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
  • மருத்துவ உதவி என்றால் சாதாரண மருத்துவம் அல்ல உயர்தர சிகிச்சை செய்து தருகிறேன்.

பாராளுமன்ற தொகுதி வடக்கு ஈச்சாம்பட்டி, சிறுகானூர், நடு இருங்கலூர், கீழ வானகரம் மற்றும் பல்வேறு இடங்களில் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதில் அவர் பேசியதாவது:

வருகிற பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். 2019த்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். வெற்றி பெற செய்த நான் உங்களுக்காக என்ன செய்தேன் என்று கேட்கலாம். உங்களுக்காக பாராளுமன்றத்திலே பேசிருக்கிறேன், ரெயில்வே மந்திரி, நிதிமந்திரி, பிரதமர் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறேன் இவை அனைத்தையும் உங்களுக்கு புத்தமாக போட்டு கொடுத்திருக்கிறேன்.

மற்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்பிக்கள் இது போன்ற புத்தகங்கள் போடுவதில்லை.

குறிப்பாக இந்த பகுதியில் பள்ளிகளில் 42 வகுப்பறைகள் கட்டி கொடுத்திருக்கிறேன். அதேபோல் கழிவறைகள், சுற்றுசுவர் அமைத்து கொடுத்திருக்கேன். கடந்த முறை மத்திய அரசிடம் இருந்து என்ன நிதி பெறுகிறோம் என்றும் அதை எப்படி செலவிடுகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளோம். இதுவரை மூன்று மேம்பாலங்கள் கட்டிகொடுத்திருக்கிறோம். 9 தரைப்பாளங்களை கட்டிக்கொடுத்திருக்கிறோம். சிறுகனூரில் மேம்பாலம், தரைப்பாலம், ரேஷன் கடை போன்றவற்றை அமைத்து கொடுத்திருக்கிறேன்.

இதேபோல் சமூக கூடங்கள், நியாயவிலை கடைகள், கழிவு நீர் தொட்டி மற்றும் பலவற்றை செய்துள்ளோம். ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களில் 1200 மாணவர்களுக்கு மருத்தும், எஞ்ஜினியர், விவசாயம் ஆகிய உயர்கல்விகளை அளித்துள்ளோம். எனது தொகுதியில் 1200 மாணவ, மாணவிகள் பட்டாதாரிகாளாக ஆகியுள்ளோம். இதுவரை எந்த எம்பி செய்யாத ஒன்றை நான் செய்திருக்கிறேன். இதுவரை 108 கோடி மாணவர்களுக்காக செலவு செய்திருக்கிறேன்.

கடந்த 10 வருடங்களாக மோடி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் மோடி தலைமையிலான 70 மந்திரிகள் யாராவது ஊழல் செய்தார்கள் என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால் இங்கு அப்படியில்லை. ஊழல் செய்து வழங்கில் உள்ளார்கள் எப்படி தப்பிப்பார் என்றும் தெரியவில்லை. ஆகவே இந்தியாவிற்கு நல்ல ஆட்சி கொடுத்து, உலக நாடுகள் அனைத்து வியந்து பார்த்த அந்த மாமனிதரை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். மோடி அவர்கள் பிரதமர் ஆவதற்கு முன்பு 10 ஆண்டுகள் முதலமைச்சாராக இருந்தார். குஜராத்தில் நல்ல ஆட்சி கொடுத்திருக்கிறார். இந்த 23 வருடங்களில் அப்பழுக்கற்றவராக இருக்கிறார்.

இந்த பாராளுமன்ற தேர்தலில் நான் வெற்றி பெற்றால் 1500 குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 10 லட்சம் வீதம் மருத்துவ காப்பீடு வசதி செய்து தருவேன் என்று உறுதி அளிக்கிறேன். மருத்துவ உதவி என்றால் சாதாரண மருத்துவம் அல்ல உயர்தர சிகிச்சை செய்து தருகிறேன்.

நடு இருங்கலூரில் பேசும் போது, தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடைபெற்று வருகிறது. திமுக அரசு வெற்றி பெற்ற பிறகு 3 ஆண்டுகள் கழித்தே மகளிர் உரிமை தொகை ரூ.1000 அளித்தனர். 3 வருடங்களில் ஒருவருக்கு 36 ஆயிரம் ரூபாய் பாக்கி வைத்துள்ளனர். இந்த 36 ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு மாதம் 1000 ரூபாய் கொடுத்திருந்தால் சந்தோஷபட்டிருக்கலாம். ஐந்து வருட ஆட்சியில் 2 வருடங்கள் மட்டும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும். போலி வாக்குறுதிகளை மட்டுமே திமுக குடும்ப ஆட்சில் கொடுக்க முடியும். திமுக ஆட்சியில் 8.75 கோடி கடன் வைத்துள்ளது. திமுக அரசு கஜானவை காலி செய்து உள்ளனர். ஒவ்வொரு தமிழன் மீது கடன் சுமையை ஏற்றி உள்ளனர்.

ஆகவே, மோடியின் ஆட்சிக்கு பிறகு தான் இந்தியாவை உலகநாடுகள் திரும்பி பார்க்கின்றனர் மோடியின் கரங்களை வலுப்படுத்துவது ஒவ்வொரு இந்தியனுடைய கடமை என்று அவர் பேசினார்.

Tags:    

Similar News