திருவள்ளூர் மாவட்டத்தில் விடிய விடிய மழை
- திருவள்ளூர் மாவட்டம் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை கனமழை பெய்தது.
- திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது.
திருவள்ளூர்:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மிதமாக பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை கனமழை பெய்தது.
திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இன்று காலை 6 மணி வரை பெய்த மழையின் அளவு விவரம் வருமாறு:
இதில் அதிகபட்சமாக திருவள்ளூரில் 7.2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
திருவள்ளூர் - 72 மி.மீட்டர்
ஜமீன் கொரட்டூர் - 67 மி.மீட்டர்
திருவலாங்காடு - 54 மி.மீட்டர்
திருத்தணி - 48 மி.மீட்டர்
பூந்தமல்லி - 41 மி.மீட்டர்
பொன்னேரி - 38 மி.மீட்டர்
சோழவரம் - 36 மி.மீட்டர்
பூண்டி - 35 மி.மீட்டர்
ஆவடி - 32 மி.மீட்டர்
செங்குன்றம் - 30 மி.மீட்டர்
தாமரைப்பாக்கம் - 29 மி.மீட்டர்
கும்மிடிப்பூண்டி - 17 மி.மீட்டர்
ஊத்துக்கோட்டை - 14 மி.மீட்டர்
பள்ளிப்பட்டு - 8 மி.மீட்டர்
ஆர்.கே. பேட்டை - 4 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.