தமிழ்நாடு

(கோப்பு படம்)

சூட்கேஸ் கைப்பிடிக்குள் மறைத்து வைத்து கடத்தப்பட்ட தங்கம் பறிமுதல்

Published On 2022-11-26 18:42 GMT   |   Update On 2022-11-26 18:42 GMT
  • துபாயிலிருந்து சென்னை வந்த விமான பயணிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை
  • பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.16.49 லட்சம் என தகவல்.

சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத் துறையின் முதன்மை ஆணையர் மேத்யூ ஜாலி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 23.11.2022 அன்று, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் எண் மூலம் துபாயிலிருந்து வந்த ஒரு ஆண் பயணியை விமான சுங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அவரது பொருட்களை சோதனையிட்டனர். அப்போது ஸ்ட்ரோலர் சூட்கேஸின் கைப்பிடி கம்பியின் உள்ளே துருப்பிடிக்காத இரும்புக் குழாய்க்குள் வெவ்வேறு அளவுகளில் தங்கக் கம்பிகள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

345 கிராம் எடையுள்ள 15 தங்க கம்பிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் 16 லட்சத்து 43 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News