தமிழ்நாடு

மேஜிக் செய்ய அனுமதி வழங்காததால் கல்வி அதிகாரியின் கையெழுத்தை போட்டு மோசடி- வடமாநில கும்பல் கைது

Published On 2023-06-24 04:55 GMT   |   Update On 2023-06-24 04:55 GMT
  • ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு அரசு பள்ளிகளுக்கு சென்று அங்குள்ள மாணவர்களுக்கு மேஜிக் செய்து காண்பித்தனர்.
  • திண்டுக்கல் பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்த வடமாநிலத்தை சேர்ந்த 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல்-பழனி சாலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 14ந் தேதி டெல்லியை சேர்ந்த ரோகித்ராய் (வயது22), கமல்ராய் (22), மெகந்தர்ராய் (30), அஜய்ராய் (23), மேக்ராஜ் (60) ஆகிய 5 பேர் திண்டுக்கல்மாவட்டத்தில் உள்ள அரசு, உதவி பெறும் பள்ளிகளில் மேஜிக் செய்து காட்ட அனுமதி வழங்க வேண்டும் என விண்ணப்பம் அளித்தனர்.

ஆனால் இதற்கு முதன்மை கல்வி அலுவலர் நாசுருதீன் அனுமதி வழங்க மறுத்துவிட்டார். இதனையடுத்து அவர்கள் கல்வி அலுவலக வெளியில் இருந்த அறிவிப்பு பலகையில் நாசுருதீன் கையெழுத்தை ஸ்கேன் செய்து பள்ளிகளில் மேஜிக் செய்ய அனுமதி வழங்கப்ப டுவதாக போலியான சுற்றறிக்கையை தயார் செய்தனர். மேலும் ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு அரசு பள்ளிகளுக்கு சென்று அங்குள்ள மாணவர்களுக்கு மேஜிக் செய்து காண்பித்தனர்.

அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பள்ளி ஆசிரியர்கள் சிலர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் அனுமதி அளிக்கவில்லை என தெரிய வந்தது. இதனையடுத்து மேஜிக் ஆசாமிகளை பிடிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகார் அளித்தார். அதன்பேரில் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்த வடமாநிலத்தை சேர்ந்த 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News