தமிழ்நாடு

திருவள்ளூர் அருகே தெர்மாகோல் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீவிபத்து

Published On 2023-08-10 06:20 GMT   |   Update On 2023-08-10 06:20 GMT
  • நள்ளிரவு தொழிற்சாலையில் இருந்து கரும்புகை வெளியேறியது.
  • தீ கொழுந்து விட்டு எரிந்ததால் தொழிற்சாலைக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த காட்டுப்பாக்கம் கிராமத்தில் தெர்மாகோல் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.

இந்த நிலையில் நள்ளிரவு தொழிற்சாலையில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென அங்குள்ள அறைகள் முழுவதும் பரவி பற்றி எரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் தொழிற்சாலையை விட்டு அலறியடித்து வெளியேறினர்.

தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

தீ கொழுந்து விட்டு எரிந்ததால் தொழிற்சாலைக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் அருகில் இருந்த சுவற்றை உடைத்து அதன்வழியாக தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தெர்மாகோல் மற்றும் அதன் மூலப்பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.

தீ விபத்துக்கான காரணம் ககுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News