தமிழ்நாடு

துர்கா ஸ்டாலினுக்கு ராமர் கோவில் அழைப்பிதழ்-அட்சதை: பக்தியுடன் பெற்றுக் கொண்டார்

Published On 2024-01-14 10:20 GMT   |   Update On 2024-01-14 10:20 GMT
  • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடை பெறுகிறது.
  • தமிழகம் முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்படுகிறது.

சென்னை:

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடை பெறுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் வீடு வீடாக அழைப்பிதழ் மற்றும் அட்சதை பிரசாதம் வழங்கி அழைத்து வருகிறார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினை ஆர்.எஸ்.எஸ். மற்றும் விசுவ இந்து பரிசத் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் நேரில் சந்தித்து ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை சார்பாக 22-ந்தேதி நடை பெறும் கும்பாபிஷேக அழைப்பிதழையும், ராமருக்கு பூஜை செய்த அட்சதையையும் வழங்கினார்கள்.

அவரும் பக்தியுடன் பெற்றுக் கொண்டு விரைவில் தரிசனம் செய்ய வருவதாக தெரிவித்து உள்ளார்.

தமிழகம் முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்படுகிறது. பொங்கல் திருநாளான நாளை (15-ந்தேதி) வரை இந்த பணிகள் நடக்கிறது.

Tags:    

Similar News