தமிழ்நாடு

தி.மு.க.-வில் முதல் ஆளாக வேட்புமனு தாக்கல் செய்தார் அருண் நேரு

Published On 2024-03-22 07:29 GMT   |   Update On 2024-03-22 08:04 GMT
  • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
  • பெரம்பலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கற்பகத்திடம் வேட்புமனுவை அருண் நேரு வழங்கினார்.

பெரம்பலூர்:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ந் தேதி நடக்கிறது. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வரும் 27-ந் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 28-ந் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப்பெற 30-ந் தேதி கடைசி நாளாகும்.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்-9, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் தலா 2 இடங்களிலும், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் போட்டியிடுகிறது. இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளது.

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தல் அறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேரு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

பெரம்பலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கற்பகத்திடம் வேட்புமனுவை அருண் நேரு வழங்கினார். திமுகவில் முதல் ஆளாக அருண்நேரு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

Tags:    

Similar News