தமிழ்நாடு செய்திகள்

ஜீவா

யூடியூப்பில் அவதூறு: தி.மு.க. நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

Published On 2024-02-09 12:09 IST   |   Update On 2024-02-09 12:09:00 IST
  • தி.மு.க. நிர்வாகி மீது அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகளே புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • கட்சி கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்த ஜீவா அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ளார்.

தேனி:

தேனி வடக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளராக இருந்தவர் ஜீவா. இவர் சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வந்தார். இவர் சமூக வலைதளங்களில் தங்கதமிழ்ச்செல்வன் மற்றும் சரவணக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் மீதும் தி.மு.க. நிர்வாகிகள் மீதும் பல்வேறு அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.

எனவே இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட எஸ்.பி.யிடம் தி.மு.க. நிர்வாகிகள் புகார் அளித்தனர். தி.மு.க. நிர்வாகி மீது அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகளே புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் ஜீவாவை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கட்சி கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்த ஜீவா அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News