தமிழ்நாடு செய்திகள்

மீஞ்சூரில் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Published On 2023-02-06 17:30 IST   |   Update On 2023-02-06 17:30:00 IST
  • மீஞ்சூர் ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • காலி பணியிடங்களில் 50 சதவீதம் ஊழியர்களை நியமிக்க வேண்டும்.

பொன்னேரி:

தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீஞ்சூர் ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் ஓய்வூதிய சங்க மாவட்ட தலைவர் செல்வராஜ் சத்துணவு ஊழியர் சங்க தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் குறைந்த பட்சம் ஓய்வு ஊதியம் 6750 வழங்க வேண்டும். அரசு துறையில் கல்வி தகுதி அடிப்படையில் காலி பணியிடங்களில் 50 சதவீதம் ஊழியர்களை நியமிக்க வேண்டும் காலை உணவு திட்டத்தை சத்துணவு திட்டத்தில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் சத்துணவு அமைப்பாளர், சமையளர், உதவியாளர்கள் அங்கன்வாடி உதவியாளர்கள் ஓய்வு ஊதியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News