தமிழ்நாடு செய்திகள்
மதம் பற்றி கருத்து- புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு
- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தனது நண்பர்களின் வாட்ஸ் அப் குழுவில் மதம் தொடர்பான ஆடியோவை வெளியிட்டிருந்தார்.
- போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
சென்னை:
சென்னை புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தனது நண்பர்களின் வாட்ஸ் அப் குழுவில் மதம் தொடர்பான ஆடியோவை வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன்படி இணை கமிஷனர் மயில்வாகனன் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார்.