தமிழ்நாடு

அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்திய கலெக்டர்

Published On 2023-11-24 07:06 GMT   |   Update On 2023-11-24 08:27 GMT
  • கோவிந்தபுரம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் பழனி திடீர் ஆய்வு மேற்கொண்டார்
  • பள்ளிக்கு உரிய நேரத்திற்கு வராத 2 ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் கோவிந்தபுரம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இன்று காலை மாவட்ட கலெக்டர் பழனி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது காலை 9.15 மணி வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால் மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பாடம் நடத்தினார்.

இதைத்தொடர்ந்து பள்ளிக்கு உரிய நேரத்திற்கு வராத 2 ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் பழனி அதிரடி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News