தமிழ்நாடு செய்திகள்
ராமேஸ்வரத்தில் மீனவர்களுடன் கலந்துரையாடிய முதல்வர் ஸ்டாலின்
- வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தை முடித்துக் கொண்டு முதல்வர் ராமேஸ்வரம் சென்றார்.
- அங்கு மீனவர்கள், அவர்களது குடும்பத்தினரைச் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார்
ராமநாதபுரம்:
தி.மு.க. தென்மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் இன்று ராமநாதபுரத்தில் நடைபெற்றது. .
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தென்மாவட்டங்களில் உள்ள 10 பாராளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், முகவர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். இந்த கூட்டத்தை முடித்து கொண்டு முதலமைச்சர் ராமேஸ்வரம் சென்றார்.
இந்நிலையில், ராமேஸ்வரத்தில் மீனவர்கள், அவர்களது குடும்பத்தினரைச் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார் அக்காள்மடம், சேதுபதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மீனவர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.