தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Published On 2023-10-31 07:47 GMT   |   Update On 2023-10-31 07:47 GMT
  • தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
  • சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.

சென்னை:

இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.

வடகிழக்கு பருவமழை தற்போது வரை இயல்பை விட 43 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. அக்டோபர் மாதத்தில் வழக்கத்தை விட குறைவான மழை பெய்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்புக்கு அதிகமாகவும், 16 மாவட்டங்களில் குறைவாகவும் மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News