தமிழ்நாடு

துரைமுருகன், கே.என்.நேரு வேலூர் மாநகராட்சி பகுதியில் சாலை பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

ரூ.14 ஆயிரம் கோடியில் காவிரி குடிநீர் திட்ட பணி- அமைச்சர் கே.என்.நேரு

Published On 2023-04-24 10:29 GMT   |   Update On 2023-04-24 10:30 GMT
  • வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் 91 சதவீதம் முடிந்துள்ளது.
  • பாதாள சாக்கடை திட்டத்தில் 29 கிலோமீட்டர் மட்டுமே பணிகள் முடிக்கப்பட வேண்டி உள்ளது.

வேலூர்:

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை திட்ட பணிகள் குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, துரைமுருகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

வேலூர் மாநகராட்சி சாலைகளுக்காக ரூ.280 கோடி வழங்க உள்ளோம். மேலும் பல்வேறு திட்டங்களில் மொத்தம் ரூ.314 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தேவைக்கேற்ப பணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் 91 சதவீதம் முடிந்துள்ளது. 23 பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. விரைவில் அந்தபணிகள் முடிக்க தீவிரம் காட்டப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டத்தில் 29 கிலோமீட்டர் மட்டுமே பணிகள் முடிக்கப்பட வேண்டி உள்ளது.

அந்த பணிகளும் முடிக்கப்படும்.பொழுதுபோக்கிற்காக பூங்காக்கள் அமைக்கும் பணி மற்றும் சீரமைக்கும் பணிக்காக நிதி ஒதுக்கப்பட உள்ளது.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம். ரூ.7 ஆயிரம் கோடி செலவில் பணிகள் நடந்துள்ளது. காவிரி குடிநீர் வழங்கும் பொருட்டு வேலூர் (ஒரு பகுதி), திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி, விழுப்புரம் (ஒரு பகுதி) ரூ.14 கோடி மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளோம். கடன் வரப்பெற்ற பின்னர் பணிகள் தொடங்கும்.

வேலூர் மாநகராட்சியில் அம்ரூத் திட்டத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளிலிருந்து வீடுகளுக்கு செல்லும் சப்ளை குழாய் இன்னும் சரிவர பணிகள் நிறைவடையாததால் தண்ணீர் வழங்க முடியவில்லை.

பணிகளை விரைந்து முடிக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் வீடுகளுக்கு தண்ணீர் வழங்கபடவில்லை மேலும் ஒப்பந்ததாரரும் ஓடிவிட்டார் அவரை நான் என்ன செய்ய முடியும்

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News