தமிழ்நாடு செய்திகள்

திருவள்ளூர் அருகே 108 ஆம்புலன்சு மோதி காவலாளி பலி

Published On 2022-10-20 12:34 IST   |   Update On 2022-10-20 12:34:00 IST
  • திருவள்ளூரிலிருந்து பேரம்பாக்கம்‌ நோக்கி சென்ற 108 ஆம்புலன்ஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
  • பலத்த காயமடைந்த ஆனந்தவேலை மீட்டு திருவள்ளூர் அரசு அஸ்பத்திரியில் சேர்த்தனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் வெண்மனம்புதூரை சேர்ந்தவர் ஆனந்த வேல் (56). மப்பேட்டில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இவர் நேற்று இரவு வேலையை முடித்து, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

கடம்பத்தூர் ரெயில்வே மேம்பாலத்தில் ஏறி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் கீழே இறங்கியபோது திருவள்ளூரிலிருந்து பேரம்பாக்கம்‌ நோக்கி சென்ற 108 ஆம்புலன்ஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆனந்தவேலை மீட்டு திருவள்ளூர் அரசு அஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஆனந்தவேல் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து ஏற்படுத்திய வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் செந்தில்குமார் மப்பேடு போலீசில் சரண் அடைந்தார். கடம்பத்தூர் சப்-இன்ஸ் பெக்டர் இளங்கோவன் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News