தமிழ்நாடு செய்திகள்
சென்னை

அ.தி.மு.க. விவகாரம் - ஓ.பி.எஸ். மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு

Published On 2024-01-10 21:46 IST   |   Update On 2024-01-10 21:46:00 IST
  • அ.தி.மு.க. கட்சியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.
  • ஓ.பி.எஸ். மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு.

அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகிறது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபீக் அடங்கிய அமர்வு காாலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்க இருக்கிறது. அ.தி.மு.க. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ். கட்சி கொடி, சின்னத்தை பயன்படுத்த தனி நீதிபதி தடை விதித்து இருந்தார்.

இவரது தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ். சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News