தமிழ்நாடு

அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்: தெற்கு ரெயில்வே

Published On 2024-02-21 03:02 GMT   |   Update On 2024-02-21 03:02 GMT
  • திருவனந்தபுரம் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயில் கூடுதல் நிறுத்தமாக கேரள மாநிலம் சிராயின்கீழ் பகுதியில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.
  • சென்னை எழும்பூர் வரும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் கூடுதல் நிறுத்தமாக கேரள மாநிலம் பல்ராமபுரம் பகுதியில் ஒரு நிமிடம் நின்று வரும்.

சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை சென்டிரலில் இருந்து வரும் 24-ந் தேதி மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.12695) கூடுதல் நிறுத்தமாக கேரள மாநிலம் சிராயின்கீழ் பகுதியில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.

திருவனந்தபுரத்தில் இருந்து வரும் 25-ந் தேதி மாலை 3 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12624) கூடுதல் நிறுத்தமாக கேரள மாநிலமான கழக்கூட்டம், சிராயின்கீழ் மற்றும் கடகவூர் பகுதிகளில் ஒரு நிமிடம் நின்று வரும்.

மேலும், கொல்லத்தில் இருந்து 25-ந் தேதி பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (20636) கூடுதல் நிறுத்தமாக கேரள மாநிலம் பல்ராமபுரம் பகுதியில் ஒரு நிமிடம் நின்று வரும்.

இதேபோல, கொச்சுவேலியில் இருந்து வரும் 25-ந் தேதி பிற்பகல் 2.40 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (06429) ஒரு மணி நேரம் தாமதமாக மாலை 3.40 மணிக்கு கொச்சுவேலியில் இருந்து புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News