தமிழ்நாடு செய்திகள்

ஆடிப்பூரம் திருவிழா: செங்கல்பட்டு மாவட்டத்துக்கு 1-ந்தேதி விடுமுறை

Published On 2022-07-27 09:33 IST   |   Update On 2022-07-27 09:33:00 IST
  • ஆடிப்பூரம் திருவிழா வருகிற 1-ந்தேதி நடைபெற உள்ளது.
  • உள்ளுர் விடுமுறை நாளை ஈடுசெய்ய வருகிற 13-ந்தேதி அன்று பணிநாளாக அறிவிக்கப்படுகிறது.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூரம் திருவிழா வருகிற 1-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளுர் விடுமுறை நாளை ஈடுசெய்ய வருகிற 13-ந்தேதி (சனிக்கிழமை) அன்று பணிநாளாக அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News