என் மலர்
நீங்கள் தேடியது "ஆடிப்பூரம் திருவிழா"
- ஆடிப்பூரம் திருவிழா வருகிற 1-ந்தேதி நடைபெற உள்ளது.
- உள்ளுர் விடுமுறை நாளை ஈடுசெய்ய வருகிற 13-ந்தேதி அன்று பணிநாளாக அறிவிக்கப்படுகிறது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூரம் திருவிழா வருகிற 1-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளுர் விடுமுறை நாளை ஈடுசெய்ய வருகிற 13-ந்தேதி (சனிக்கிழமை) அன்று பணிநாளாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






