தமிழ்நாடு

தடையில்லா மின்சாரம் வழங்குவது குறித்து ஆய்வு கூட்டம்- அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடந்தது

Published On 2023-05-22 08:56 GMT   |   Update On 2023-05-22 08:56 GMT
  • கூட்டத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார்.
  • பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிகளிடம் மின் பற்றாக்குறை குறித்த மனுக்களை பெற்றுக் கொண்டார்.

கூடுவாஞ்சேரி:

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடையில்லா, சீரான மின்சாரம் வழங்குவதற்க்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சிறப்பு ஆய்வு கூட்டம் மறைமலைநகர் பேரமனூர் பகுதியில் உள்ள மாநில ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிகளிடம் மின் பற்றாக்குறை குறித்த மனுக்களை பெற்றுக் கொண்டார்.

மேலும் தமிழ்நாடு மின்சார வாரிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குனர் சிவலிங்கராஜன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக காஞ்சிபுரம் மண்டல தலைமை பொறியாளர் காளிமுத்து ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்தில் காஞ்சிபுரம் பாரளுமன்ற உறுப்பினர் செல்வம், எம். எல். ஏ.க்கள் சுந்தர், இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், பாலாஜி,

பாபு மற்றும் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்த குமாரி, மறைமலைநகர் நகர் மன்ற தலைவர் சண்முகம் மற்றும் உள்ளாட்சி பிரதிகள் துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News